நாடு முழுவதும் இன்று சனிக்கிழமை (20) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் “யுக்திய“ நடவடிக்கையின் போது 986 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களில் 667 பேர் பல்வேறு போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தால் தேடப்பட்டு வரும் பட்டியலில் இருந்த 319 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 10 பேருக்கு எதிராக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் ஏனைய 18 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் போது 586 கிலோகிராம் ஹெரோயின், 40, 500 கஞ்சா செடிகள் , 44 போதை மாத்திரைகள், 180 கிராம் ஐஸ் போதைபொருள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டள்ளன.

