சுவிற்ஸர்லாந்து டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஷ்டலினா ஜோர்ஜியாவா (Kristalina Georgieva) மற்றும் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத் (Gita Gopinath) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.
பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்கவும் உடனிருந்தார்.

