தொடர் காய்ச்சலால் ஆசிரியை உயிரிழப்பு

139 0

ஐந்து நாள் தொடர் காய்ச்சல் காரணமாக இளம் ஆசிரியை ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

நாயன்மார்கட்டைச் சேர்ந்த திருமதி சங்கரி மதிரூபக்குருக்கள் (வயது-33) என்ற ஒரு குழந்தையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

ஈமோக்குளோபின் குறைபாட்டால் மரணம் சம்பவித்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.