தாதியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் வைத்திய சேவைகள் பெரிதும் பாதிப்பு

41 0

அரச வைத்தியசாலைகளில் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று புதன்கிழமை ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள  வைத்திய சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

வைத்திய அதிகாரிகள் கடமைக்கு வருகை வந்திருந்த போதிலும் தாதியர்கள் வருகை தராமையால் வைத்திய சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

தூர இடங்களிலிருந்து கிளினிக்களில் சிகிச்சை பெற வந்திருந்த நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.