இராணுவத்தை விசாரிக்கவேண்டும் எனின் விடுதலைப்புலிகளையும் விசாரிப்போம்-ராஜித்த

382 0
போர்க்குற்றம் என்ற சொல்லை ஏற்றுக்கொள்ளமுடியாது ஐ நா சபையினால் இரண்டு வருட காலநீடிப்பு வழங்கப்பட்டுள்ளது நாம் இந்த காலப்பகுதியில்  ஐ நா சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கட்டாயம் நாம் நிறைவேற்றியே ஆக வேண்டும்.எனினும் போர்க்குற்றம்  என்ற விடயத்தை நாம் ஏற்று கொள்ளமுடியாது முதலில் என்ன நடந்தது என்பதை விசாரிக்கவேண்டும்.
விசாரணை மூலம் தான்  போர்க்குற்றம் நடைபெற்றதா என்பதை அறியமுடியும் எனவே நாம் இராணுவத்தை விசாரிக்க வேண்டும் என பலர் குரல் கொடுக்கிறார்கள் அவ்வாறு விசாரிக்கவேண்டுமாயின் தமிழீழ விடுதலை புலிகளையும் விசாரிக்க வேண்டும்.
விடுதலைப்புலிகளில் தற்போதுள்ள தலைவர்களில் தயாமாஸ்ரர் போன்ற முக்கியஸ்தர்களையும் விசாரிக்கவேண்டும் எனவும் தெரிவித்த சுகாதார அமைச்சர்.மேலும் போர்க்குற்றம் என்ற சொல்லை நாம் விசாரணை நடாத்தாது ஏற்றுகொள்ளமுடியாது எனவும் தெரிவித்தார்.