பொலிஸ் உத்தியோகத்தரின் ஏ.ரி.எம் அட்டையை திருடி பொருட்களை கொள்வனவு செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

43 0

பொலிஸ் உத்தியோகத்தரின் வங்கி ஏ.ரி.எம் அட்டையை திருடி பொருட்களை கொள்வனவு செய்ததாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கதுருவெல பிரதேசத்தை சேர்ந்த மன்னம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தராவார்.

பாதிக்கப்பட்டவர் அநுராதபுரம் – உடமலுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தராவார்.

இவர் அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள அரச வங்கியின் ஏ.ரி.எம் இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுக்கும் போது அவருக்கு பின்பாக வரிசையில் நின்றுகொண்டிருந்த சந்தேக நபர் அவரது வங்கி அட்டையை திருடி தப்பித்துச்சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் பொலிஸில் முறைப்பாடு வழங்கியதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் திருடிய ஏ.ரி.எம் அட்டையிலிருந்து 41 ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமான பொருட்களை கொள்ளவனவு செய்துள்ளதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.