பரீட்சைக்கு முன்னரே வினாத்தாள் வெளியான விவகாரம்: அம்பாறை ஆசிரியர் கைது!

52 0

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விவசாய விஞ்ஞான வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னரே வெளியான சம்பவம் தொடர்பில் அம்பாறையைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறையைச் சேர்ந்த ஆண் ஆசிரியர் ஒருவரே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.