யாழில் டெங்கு தீவிரம்: கொழும்பிலிருந்து சென்ற விசேட குழு கள ஆய்வு!

53 0

கொழும்பிலிருந்து சென்ற டெங்குக் கட்டுப்பாட்டுப் பணிகளில் தேர்ச்சிபெற்ற குழுவினர் (பல மாவட்ட மருத்துவர்களையும் உள்ளடக்கிய குழு) சனிக்கிழமை (13) யாழ்ப்பாணம் நகரப் பகுதிகளை அண்டிய பிரதேசங்களில்  கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். 

இதன்போது,  வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸூம் டெங்கு தொடர்பான கள ஆய்வுப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டு, டெங்கு  தொற்று இலகுவாகப் பரவக்கூடிய ஏதுவான நிலையில் இருக்கும் பகுதிகள் அவதானிக்கப்பட்டு விரைவில் டெங்கைக் கட்டுப்படுத்தக் கூடிய திட்டங்களுக்கான  உத்தரவுகளை பிறப்பித்தார்.