பருத்தித்துறை பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கைகள்

35 0

பருத்தித்துறை பகுதியில் நேற்று இரவு பொலிஸாரால் மோப்ப நாயின் உதவியுடன் விசேட போதைப்பொருள் ஒழிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியந்த அமரசிங்க தலைமையில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொலிஸாரால் இந்த சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது பருத்தித்துறை நகரில் இருந்து கொழும்பு செல்லும் பயணிகள் சொகுசு பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதேவேளை, யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் பொலிஸாரினால் நேற்று விசேட சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, யுக்திய 2024 சின்னம் பொறித்த ஸ்ரிக்கரும் ஒட்டப்பட்டது.