மேலும் 05 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி

163 0

காலி சிறைச்சாலையில் மேலும் 05 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (05) பிற்பகல் காலி சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதிகள் குழுவொன்று சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கராப்பிட்டிய வைத்தியசாலையில் இதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட இரண்டு கைதிகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, சிறைச்சாலையின் செயற்பாடுகளை இன்று முதல் 7 நாட்களுக்கு மட்டுப்படுத்த சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.