இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சு ஆகியன இணைந்து சட்டத்தில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்கு தேவையான அமைச்சரவைப் பத்திரத்தை உருவாக்கி, பாரியளவிலான கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்கான விசேட அதிகாரங்களைக் கொண்ட ‘தேசிய போதைப்பொருள் எதிர்ப்புக் கட்டளை’ பிரிவை உருவாக்க எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.

