போதைப்பொருள் தடுப்பு, பாரிய கடத்தல்காரர்களை சிக்க வைக்க ‘ தேசிய போதைப்பொருள் தடுப்புக் கட்டளை’ பிரிவு !

133 0
போதைப்பொருள் தடுப்பு, பாரிய கடத்தல்காரர்களைச் சிக்க வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக ‘தேசிய போதைப்பொருள் தடுப்புக் கட்டளை’ (போதைக்கு எதிரான கட்டளை) பிரிவு என்ற படையை உருவாக்குவதற்கான கூட்டு அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் வாரத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சு ஆகியன இணைந்து சட்டத்தில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்கு தேவையான அமைச்சரவைப் பத்திரத்தை உருவாக்கி, பாரியளவிலான கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்கான விசேட அதிகாரங்களைக் கொண்ட ‘தேசிய போதைப்பொருள் எதிர்ப்புக் கட்டளை’ பிரிவை உருவாக்க எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.