மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

132 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இன்றைய தினம் கன மழை பெய்து வருவதன் காரணமாக, மட்டக்களப்பு நகரின் பல இடங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இருதயபுரம், ஜெயந்திபுரம், கூழாவடி, மாமாங்கம், உப்போடை, ஊறணி உட்பட பல பகுதிகளில் வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களில் ஒன்றான நவகிரிகுளத்தின் நீர்மட்டம் வான்பாயும் நிலைமை காரணமாக இரண்டு வான்கதவுகள் ஐந்து அடி திறக்கப்பட்டுள்ளது.

அம்பாறையிலும் ஏற்பட்டுள்ள கனமழையால் பாரிய இடர்நிலையை எமது மக்கள் சந்தித்துவருகின்றனர்.