ஆழிப்பேரலையை நினைவுகூரும் சிற்ப கண்காட்சி!

54 0

ஆழிப்பேரலை பேரிடர் ஏற்பட்டு 19 ஆம் ஆண்டை நினைவுகூரும் பல்வேறு நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில் ஆழிப் பேரலை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களை  நினைவுகூரும் நிகழ்வும் அத் தாக்கத்தை எடுத்துக்காட்டும் சிற்பக் கண்காட்சியும் தெல்லிப்பழை ஆனந்தன் சிற்பாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26)  இடம்பெற்றது.

ஆழிப்பேரலை தாக்கத்தை சித்தரிக்கும் விதமாக செதுக்கப்பட்ட நினைவுச் சின்னத்திற்கு முன்னால் சுடரேற்றி உயிரிழந்த மக்கள் அஞ்சலி செலத்தியதையடுத்து இவற்றுடன் தத்துரூபமாகச் செதுக்கப்பட்ட பல்வேறு சிற்பங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.