இந்தியாவில் ஓமிக்ரானின் துணை வேரியண்ட் எனப்படும் புதிய JN1 கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இது இலங்கையிலும் பரவக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் துறைசார் வல்லுநர்கள் JN1 கொரோனா வைரஸ் தாக்குதலை மிகவும் தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளனர், ஏனெனில் இந்த திரிபு உடலை மிகவும் ஆழமாக பாதிக்கிறது என்பதோடு, இதிலிருந்து மீள அதிக காலம் எடுக்கும் எனவும் கூறப்படுகிறது.

