இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் உட்பட 10 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமினம்

148 0

இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரட்ண உட்பட பத்து சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமனம் வழங்கப்பட்டுள்ள நிலையில் உயர் நீதிமன்றத்தின் சம்பிரதாய அமர்வைத் தொடர்ந்து பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

அதனடிப்படையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவட்ண மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகளான சமந்த வீரகோன், கலாநிதி அசங்க குணவன்ச, மொஹமட்அடமலி, ஹர்ஷ பெர்னாண்டோ , கலாநிதி சிவாஜி பீலிக்ஸ்பைசா மார்க்கர்,  உபுல் குமாரப்பெரும, விரன் கொரியா மற்றும் எராஜ் டி சில்வா ஆகியோரே மேற்படி ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களாவர்.