யேர்மனி வாழ் சொந்தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைக் கூறிக்கொள்கின்றோம்.- மன்னார் பாலியாற்று கிராம மக்கள்.

479 0

மன்னார் பாலியாற்று கிராமத்தில் மழை வெள்ளம் காரணமாக மிகவும் பாதிப்பிற்குள்ளான குடும்பங்களில் கிராம அலுவலரின் பட்டியல் படி 25 குடும்பங்களிற்கு புலம்பெயர் உறவுகளான “யேர்மன் வாழ் தமிழ் மக்கள்”22.12.2023 மாலை 3.00 மணியளவில் பொதுமண்டபத்தில் வைத்து பொதிகள் வளங்கி வைக்கப்பட்து. பாதிப்புற்ற மக்களுக்கு இது மிகுந்த மகிழ்வை கொடுத்தது. இதனை ஒழுங்கமைத்த உறவுகளுக்கும். யேர்மன் வாழ் தமிழ் மக்களுக்கும், மிகுந்த நன்றியைக்கூறிவதில் மன நிறைவடைகின்றோம். உங்கள் பணி தொடர வாழ்துகின்றோம்.

மன்னார் நெடுங்கண்டல் கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தில் பாதிப்புற்ற மிகவும் வறிய நிலையில் உள்ள 16 குடும்பங்களுக்கு 23.12.2023. அன்று கிராம அலுவலர் அவர்களின் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது. இதற்காக உதவிய யேர்மன் வாழ் சொந்தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைக் கூறிக்கொள்கின்றோம்.