யாழ். சுன்னாகத்தில் 8 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

45 0

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி பகுதியில் வைத்து ஹெரோயினுடன் 34 வயது சந்தேக நபர் ஒருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், அவரிடமிருந்து 8 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

பொலிஸாரை கண்டதும் சந்தேக நபர் தப்பி ஓட முயற்சித்துள்ள வேளையிலேயே சுன்னாகம் பொலிஸார் அந்நபரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து, மேலதிக விசாரணைகளின் பின்னர், கைதானவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.