சிறைக்கைதிகளில் 53 வீதமானவர்கள் போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டவர்கள்

173 0

2022ஆம் ஆண்டில் சிறைப்படுத்தப்பட்ட கைதிகளில் நூற்றுக்கு 53வீதமானவர்கள் போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டவர்கள். அதாவது 13794 கைதிகள் சிறைப்படுத்தப்பட்டிருப்பது போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காகும் என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டிருக்கும் புதிய கணக்காய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் கடந்த 2022ஆம் ஆண்டில் 26176 கைதிகள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக சிறைப்படுத்ப்பட்ட கைதிகளில் 4406பேர் சிறைக்கைதிகள் என்பதுடன் 9388பேர் சந்தேக நபர்களாகும்.

அத்துடன் சிறைச்சாலைகளுக்குள் இருந்துவரும் கடும் நெரிசலுக்கு  போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் காரணமாக சிறைப்படுத்தப்படுபவர்கள் அதிகரிப்பது பிரதான காரணமாக அமைந்துள்ளது.

சிறைச்சாலைகளின் பிரதான நோக்கத்தை நெருங்குவதற்கும் சிறைச்சாலைகளின் உள்ளக பாதுகாப்பு மற்றும் செயற்பாடுகளுக்கு இந்த நிலைமை இடையூறாக இருப்பதாகவும் குறித்த கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.