சீரற்ற வானிலையினால் கடந்த 12 ஆம் திகதியில் இருந்து 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தொண்டமானாறு வாவி இன்று வெள்ளிக்கிழமை திறந்து விடப்பட்டது.
கனமழை காரணமாக தேக்கிவைக்க முடியாத மேலதிக நீர் பெரும் கடற்பரப்பிற்கு செல்லுவதற்கு யாழ்ப்பாண மாவட்ட நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களினால் திறந்து விடப்பட்டன. குறித்த வாவியில் மீனவர்கள் மீன்பிடி ஈடுபட்டு வருகின்றனர்.





