எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 10 அமைச்சுக்கான செயலாளர்கள் மற்றும் இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இன்று (22) காலை இந்த நியமனங்கள் வழங்கப்பட்டது.
வசந்த பெரேரா – கல்வி அமைச்சின் செயலாளர்
எம்.என். ரணசிங்க – செயலாளர், நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு
குணதாச சமரசிங்க – செயலாளர், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு
ஏ.சி. மொஹமட் நஃபீல் – செயலாளர், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு
டபிள்யூ.பி.பி. யசரத்ன – செயலாளர், பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
சமன் தர்ஷன பண்டிகோரள – செயலாளர், நீர்ப்பாசன அமைச்சு
பி.கே.பி. சந்திரகீர்த்தி – சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளர்
கலாநிதி சுலக்ஷா ஜயவர்தன – செயலாளர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு,
ரஞ்சித் ரூபசிங்க – செயலாளர், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு
கலாநிதி தர்மஸ்ரீ குமாரதுங்க – செயலாளர், தொழில்நுட்ப அமைச்சு
ஆர்.எம்.டபிள்யூ.எஸ். சமரதிவாகர – வடமத்திய மாகாண பிரதம செயலாளர்
மிஸ். எஸ்.எல்.டி.கே. விஜயசிங்க – மேல் மாகாண பிரதம செயலாளர்

