மாவட்ட குற்ற விசாரணை பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே பொலிஸார் நேற்று மாலை குறித்த வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டு சோதனையிட்டனர்.
இதன்போது வீட்டினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 565 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதோடு, பெண்ணும் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் பின்னர், சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.