மட்டக்களப்பில் கஞ்சாவுடன் போதைப்பொருள் வியாபாரி கைது

77 0
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள 10ஆம் கட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸார்,  ஒரு கிலோ 565 கிராம் கஞ்சாவுடன் நேற்று புதன்கிழமை  (21) பெண்  ஒருவரை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட குற்ற விசாரணை பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே பொலிஸார் நேற்று மாலை குறித்த வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டு சோதனையிட்டனர்.

இதன்போது வீட்டினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 565 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதோடு, பெண்ணும் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் பின்னர், சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.