செக் குடியரசின் சென்ட்ரல் ப்ராக் நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜோன் பலாச் சதுக்கத்தில் அமைந்துள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிதாரி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக கட்டிடத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.




