நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையை தொடர்ந்து செயற்படுத்த தீர்மானம்!

30 0

அரச மறுஆய்வுக் குழுவால் மூடப்படுவதற்கு முன்மொழியப்பட்ட நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையின், நிறுவனத்தைத் தொடர்ந்து இயக்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கும். பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் கையொப்பமிடப்பட்ட கூட்டு அமைச்சரவை பத்திரமாக அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தை மூடுவது அல்லது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு மாற்றுவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணவியல் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக நியமிக்கப்பட்ட பொதுச் செலவுக் குழுவின் அறிக்கையின் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கை முன்னதாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

பணவியல், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டு அமைச்சரவை பத்திரத்துடன் தொடர்புடைய நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவது தொடர்பான அவதானிப்புகளை சமர்ப்பித்து தனது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சட்டத்தினால் ஒதுக்கப்பட்ட செயற்பாடுகளில் இருந்து நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபை விலக வேண்டும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மேலும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளருக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் உலக குடியிருப்பு திட்டத்தில் ஒரு நாட்டின் பங்களிப்புக்காக தொடங்கப்பட வேண்டிய பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றச் சட்டத்தால் நிறுவப்பட்ட ஒரே நிறுவனம் நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபையாகும்.

நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபை தற்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின்  கீழ் செயல்படுகிறது.

நகர்ப்புறமாக அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், வீட்டுத் தீர்வுகளை வழங்குவதன் மூலம் பல திட்டங்களும் வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சிப் பிரிவுகளில்; 273 உள்ளூராட்சிப் பகுதிகள் நகரப் பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, நகர்ப்புற மக்கள் எதிர்கொள்ளும் சிக்கலான சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வு நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நகர்ப்புறங்களுக்கு ஏற்ப கையாளப்படுகின்றன.

நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில்> அடுத்த நான்கு ஆண்டுகளில் திறைசேரிக்குச் சுமை ஏற்படாத வகையில் பௌதீக அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்தி வருமானம் ஈட்டுவதற்கான திட்டங்களை நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபை தயாரித்துள்ளது.