கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை நாற்பதாவது நாளாக தீர்வின்றி தொடர்கிறது.
நாளாந்தம் பல்வேறு அமைப்பினரும் அரசியல் தரப்பினர்களும் வருகை தந்து செல்கின்றனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இரவு பகலாக தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களhல்
கடந்த மாதம் 20-02-2017 அன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டமே இரவு பகலாக தொடர்கிறது.