100 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி நாற்காலியில் ரணில் அமர்வாராம்!

61 0
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் 100 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி நாற்காலியில் அமர்வார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன, இதனைத் தான் நகைச்சுவைக்காகக் கூறவில்லை எனக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் ஒரு அரசியல்வாதி என்பதை விட பொருளாதார நிபுணராக இருப்பதால், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள்  நாடு எங்கு இருக்க வேண்டும் என்ற தெளிவான பார்வையுடன் அவர் செயற்படுவார் எனவும்  தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.