தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளைக்கூட்டம்

47 0

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இந்த கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் இன்று (17.12.2023) இடம்பெற்றுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தற்போதைய திட்டங்கள் தொடர்பிலும், எதிர்காலத் திட்டச் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடல் இடம்பெற்றது.இந்த சந்திப்பில் திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவர் எஸ்.குகதாஸன், பொருளாளர் வெள்ளத்தம்பி சுரேஷ், முன்னாள் நகர சபைத் தலைவர் கே.செல்வராஜா மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.