யாழில் கஞ்சாவுடன் இருவர் கைது ; வாகனமும் பறிமுதல்

24 0
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 07 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பகுதியில் இருந்து கேரளா கஞ்சாவை கடத்தி வருவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சாவகச்சேரி பகுதியில்  பொலிஸாருடன் இராணுவ புலனாய்வாளர்களும் இணைத்து மேற்கொண்ட நடவடிக்கையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த வாகனத்தை மறித்து சோதனையிட்ட போதே, வாகனத்தில் இருந்து 07 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர்.

அதனையடுத்து, வாகனத்தில் பயணித்த இருவரையும் கைது செய்த பொலிஸார், கைது செய்யப்பட்டவர்களையும்  வாகனம் மற்றும் கஞ்சாவையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.