இறுதி ஊர்வலங்களை இடையூறின்றி நடத்துவதற்கான விதிகள் குறித்து அரசு விளக்கம் தர உத்தரவு

39 0

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடந்த இறுதி ஊர்வலத்தின்போது நடுரோட்டில் வீசப்பட்ட பூமாலை இருசக்கர வாகனத்தில் சிக்கியதால் ஏற்பட்ட விபத்தில் மென்பொறியாளர் ராஜ்கமல் தனது தாயார் கண்முன்பாக இறந்தார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இறுதி ஊர்வலங்களை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்துவது தொடர்பாக உரிய விதிகளை வகுக்க உத்தரவிடக்கோரி பண்ருட்டியைச் சேர்ந்த அன்புச் செல்வன் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தின் அடிப்படையில் இடையூறு இல்லாமல் இறுதி ஊர்வலங்களை நடத்துவதற்கு உரிய விதிகளை வகுப்பது தொடர்பாக விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் இது தொடர்பாக தமிழக அரசு, காவல் துறை விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப்.6-க்கு தள்ளிவைத்தனர்.