பெந்தோட்டை கடலில் நீராடியவர் சடலமாக மீட்பு

148 0
காலி – பெந்தோட்டை கடலில் நேற்று (11) நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் அடித்து செல்லப்பட்டு ஒருவர் காப்பாற்றப்பட்ட நிலையில் காணாமல்போன மற்றையவர் இன்று செவ்வாய்க்கிழமை  (12) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் அத்மல் என்ற 22 வயதுடையவராவார்.

நீரில் அடித்து செல்லப்பட்டு பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டவர் பெந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.