கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களுக்காக நீதிமன்றில் வாதாடுவேன்- எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

285 0

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களுக்காக நீதிமன்றில் வாதாடுவேன் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பன்னங்கண்டி மக்களுக்காக தான் நீதிமன்றில் அரச தரப்பு சட்டத்தரணியாக வாதாடவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக்குடியிருப்பு பிரதேச மக்கள் தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள்  நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்து, இன்று 9ஆவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே தமக்கான காணி உரிமத்தினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கவனயீர்ப்புப் போரட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இன்று சந்தித்துக் கலந்துரையாடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

–நானும், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனும், காணி உரிமையாளருடன் சுமூகமான முறையில் பேசி இக் காணியினை பெற்றுத்தருவதற்கு முயல்கிறோம்.

காணி உரிமையாளர், தான் நீதிமன்றம் செல்லப் போகின்றேன் எனச் சொன்னால்,  நீங்கள் சம்மதம் வழங்கினால் உங்கள் தரப்பு சட்டத்தரணியாக வாதாடுவேன். எவ்வாறாயினும் ஒரு நல்ல தீர்வினைப் பெற்றுத் தருகின்றோம்.

அதுவரை உங்கள் போராட்டத்தை நிறுத்த முடியுமா?–

எனக் கேட்டுக் கொண்டார்.