அரச அலுவலக உத்தியோகத்தர்களுக்கான தொற்றாநோய் தொடர்பான மருத்துவ முகாம்(காணொளி)

286 0

 

அரச அலுவலக உத்தியோகத்தர்களுக்கான தொற்றாநோய் தொடர்பான மருத்துவ முகாம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அனுசரணையில் சுகாதாரம் போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாம், மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

அண்மைக் காலமாக தொற்றா நோய்கள் காரணமாக அலுவலக உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த மருத்துவ முகாம் நடாத்தப்பட்டு வருகிறது.

சுகாதாரம் போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சும், கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து அலுவலக உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகின்றது.

இதற்கமைய, மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாம் இன்று நடத்தப்பட்டதுடன், நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு, நோய்களுக்கான சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.

இம்மருத்துவ முகாமில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கீர்த்திகா மதனழகன், குடும்பநல தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.