கலேவெல பிரதேசத்தில் வயலில் உழுதுக்கொண்டிருந்த போது விவசாயி ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் புலாகல பிரதேசத்தைச் சேர்ந்த எம் . ஏ . சோமதிலக என்ற 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
இவர் தனது குடும்பத்தினருடன் வயலில் உழுதுக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் தொலைதூரம் நோக்கி தூக்கி வீசப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்கப்பட்டவர் கலேவெல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.