ஹெரோயினுக்காக காத்திருந்த இளம் பிக்கு கைது

122 0

ஹெரோயின் போதைப்பொருளை பெற்றுக்கொள்வதற்காக காத்திருந்த தேரர் ஒருவர் மத்துகம பொலிஸாரால்  நேற்று வெள்ளிக்கிழமை (01) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காலி  வஸ்கடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் இளம் பிக்குவே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர் ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்  என மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிக்கு இதற்கு முன்னர் 60 கிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.