மாதகலில் மிதிவெடி கண்டெடுப்பு

52 0

யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மாதகல் – உயரப்புலம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (01) காணி ஒன்றில் மிதிவெடி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது .

குறித்த காணியின் உரிமையாளர் காணியை சுத்தம் செய்யும்போது அந்த காணியில் மிதிவெடி இருந்ததாக தெரிவித்த நிலையில் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

நீதிமன்றத்தின் அனுமதியின் பின்னர் குறித்த மிதிவெடியை  மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.