பாணந்துறை கடலில் சிறுமி ஒருவர் கடலில் அடித்து செல்லப்பட்டபோது பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர்களான் சப்-இன்ஸ்பெக்டர் நிமல்சிறி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் தசுன் ஆகியோர் உடனடியாக செயற்பட்டு சிறுமியின் உயிரைக் காப்பாற்றியதாக பொலிஸ் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொஸ்பலான பொல்பிதிமுகலனை பிரதேசத்தில் வசிக்கும் 15 வயது சிறுமியே இவ்வாறு காப்பாற்றப்பட்டார்.
இந்தச் சிறுமியை தாயிடம் ஒப்படைத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சிறுமி தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் கடலில் குதித்திருப்பது தெரியவந்தது.