மாவீரர் நாளுக்கு தடை கோரி யாழிலுள்ள 3 நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிப்பு

44 0

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ்ப்பாணத்தில் உள்ள நீதவான் நீதிமன்றங்களில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரினால் யாழ் நீதவான் நீதிமன்றிலும் , வல்வெட்டித்துறை , பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பொலிஸாரினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றிலும் , ஊர்காவற்துறை பொலிஸாரினால் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் இன்றைய தினம் திங்கட்கிழமை (27) நடைபெற்ற  விசாரணைகளை அடுத்து , அந்த அந்த நீதிமன்றங்களினால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை சுன்னாகம், அச்சுவேலி மற்றும் தெல்லிப்பளை பொலிஸாரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் கடந்த வாரம் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.