காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் இரு இளைஞர்கள் கைது

54 0

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடியில் இரு இளைஞர்கள் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி  ஏ.எம். எஸ்.ஏ ரஹீம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாச்சகரின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் காரிய வசத்தின் பணிப்புரையின் பேரில்,  26 வயதுடைய இளைஞர் ஒருவரும், 34 வயதுடைய மற்றொரு இளைஞரும் இவ்வாறு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

கைது செய்யப்பட்ட ஒரு நபரிடமிருந்து 2,037 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் மற்றும் மற்றொரு நபரிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருட்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக தெரிவித்த பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர்.