என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை!

103 0

தற்போதைய சூழ்நிலையில் நான் உயிர் இழந்தால் ஜனாதிபதியும் சாகல ரத்நாயக்கவும் பொறுப்பேற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (27) விசேட அறிக்கை ஒன்றை விடுத்த அமைச்சர், தனது வாழ்க்கை தொடர்பில் நிச்சயமற்ற சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ரொஷான் ரணசிங்க,

“சபாநாயகர் அவர்களே, இது அரசியலில் ஒரு புதிய கோணமாக இருக்கலாம். இதில் எனது உயிர் போய்விடலாம். நான் நெடுஞ்சாலையில் கொல்லப்படலாம். அது நாளையா, இன்றா அல்லது அதற்கு அடுத்த நாளா என்பது எனக்குத் தெரியாது. ஜனாதிபதி அதற்கு சாகல ரத்நாயக்கவும் பொறுப்பேற்க வேண்டும். ஹன்சார்டில் இருந்து இவற்றை வெட்ட வேண்டாம். ஆனால் இந்த 134 அவருக்கு வாக்களித்தது எம்மை இவ்வாறு பழிவாங்கவா என்ற கேள்வி எழுந்துள்ளது” என்றார்.