பொலிஸாரின் தேடுதலில் 05 பெண்கள் உட்பட 40 பேர் கைது!

50 0

வெல்லம்பிட்டி பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 40 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 05 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், பொலிஸ் மற்றும் இராணுத்தினர் இணைந்து இந்த விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.