8 விக்கெட்டுகளை வீழ்த்திய பம்பலப்பிட்டி இந்துவின் ரிஷியுதன்

61 0

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சம்மேளனம், கல்வியமைச்சுடன் இணைந்து நடாத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான பிரிவு இரண்டு கடினபந்து கிரிக்கெட் தொடரில், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும், பத்தரமுல்ல ஜயவர்த்தன மத்திய கல்லூரிக்குமிடையிலான போட்டி முல்லேரியா எதிரிவீர சரத்சந்திர விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

முதலில் தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி 126 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பத்தரமுல்ல ஜயவர்த்தன அணி 28 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தாலும், இந்துக் கல்லூரி மாணவன் செல்வசேகரன் ரிஷியுதன் 9.4 ஓவர்கள் பந்துவீசி ஓட்டம் எதுவும் கொடுக்காமல் 8 விக்கெட்டுக்களை கைப்பற்றி பெரும் சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார்.