கம்பஹா – மீரிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்குர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவரை பொல்லால் தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் நேற்று சனிக்கிழமை (25) இரவு மீரிகம பொலிஸ் பிரிவிலுள்ள அம்பேபுஸ்ஸ புகையிரத நிலையத்துக்கு அருகில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 24ஆம் திகதி இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதன் பின்னர், நேற்று கைதான சந்தேக நபர் மக்குர, அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.