தலைவர் பிரபாகரனை மீட்கும் திட்டத்தை அமெரிக்கா முன்வைக்கவில்லை – கோத்தா!

230 0

போரின் இறுதிக்கட்டத்தில் போர் வலயத்திலிருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும், உயர் மட்டத் தலைவர்களையும் பாதுகாப்பாக மீட்கும் திட்டத்தை அமெரிக்கா வைத்திருந்ததா என்பது தொடர்பில் தனக்கு ஏதும் தெரியாது என கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் வெளிநாட்டு செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களைச் சந்திக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,“அத்தகைய திட்டம் ஒன்று இருந்ததாக என்னால் உறுதியாக கூற முடியாது.ஆனால்,  பொதுமக்களை மீட்பதற்கு அமெரிக்கா விரும்புவதாக, அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் என்னிடம் கூறினார். எனினும். அவர் முன்வைத்தது பிரபாகரனையோ, புலிகளின் உயர்மட்டத் தலைவர்களையோ மீட்பதற்கான திட்டம் அல்ல. அது ஒரு பரிந்துரையாக மட்டுமே இருந்தது” என்று பதிலளித்தார்.