சட்டவிரோதமாக கனடாவிற்கு செல்ல முயன்ற மட்டக்களப்பை சேர்ந்தவர் கைது

42 0

சட்டவிரோதமான முறையில் கனடாவிற்கு செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கட்டுநாயக்கவில் இன்று (16) காலை  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்  மட்டகளப்பு பிரதேச்ததை  சேர்ந்த 37 வயது நபராவார்.

இவர் இன்று காலை 08.15 மணியளவில் டுபாய் செல்வதற்காக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இவர் பயண அனுமதிக்கான  நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக  ஆவணங்களை சமர்ப்பித்த தொடர்பில் சந்தேகமடைந்த அதிகாரிகள் இவரை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

 

பரிசோதனையில் போலியான தகவல்களுடன் போலி விசா தயாரிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.

விசாரணையில் தரகர் ஒருவரிடம் 30 இலட்சம் ரூபா கொடுத்து விசா ஏற்பாடு செய்யப்பட்டதாகவும்  கனடா சென்ற பின்னர் மேலும் 30 இலட்சம் ரூபா தருவதாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.