யாழில் பொலித்தீன் பாவனை தொடர்பான சட்ட ஒழுங்குவிதிகள் பற்றிய விழிப்பூட்டல் நிகழ்வு

34 0

யாழ். மாவட்ட பொலித்தீன் விற்பனையாளர்களுக்கான பொலித்தீன் பாவனை தொடர்பான சட்ட ஒழுங்குவிதிகள் பற்றிய விழிப்பூட்டல் பேரணி இன்றைய தினம்  வியாழக்கிழமை (16) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் குறித்த அலுவலக பிரதி பணிப்பாளர் து.சுபோகரன் தலைமையில் பொலித்தீன், பிளாஸ்டிக் விற்பனையாளர்களுக்கான பொலித்தீன் பாவனை தொடர்பான சட்ட ஒழுங்குவிதிகள் குறித்த விழிப்பூட்டல் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் யாழ். திருக்குடும்ப கன்னியர் தேசிய பாடசாலையின் சுற்றாடல் முன்னோடி மாணவர்கள், பொறுப்பாசிரியர்கள், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய சுற்றாடல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.