ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்றபேரில் விபசார விடுதி நடத்திய இரு பெண்கள் கைது

166 0

இரத்மலானை பிரதேசத்தில் ஆயுர்வேத மருத்துவ நிலையம் என கூறி விபசார விடுதியை நடத்திய இரண்டு பெண்கள் திங்கட்கிழமை (13) கல்கிஸை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 32 வயதுடைய பதியத்தலாவ மற்றும் அம்பாறை பிரதேசங்களை சேர்ந்த இரண்டு பெண்கள் ஆவார்.

கல்கிஸை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.