நவகமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொலிஸ் சுற்றிவளைப்பின் போது ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் நவகமுவ பொலிஸாரால் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கடுவல பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய இளைஞராவார்.
நவகமுவை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த இரகசிய தகவலின்பேரில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 15 கிராம் 420 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

