புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம்

216 0

புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் [SPDC] 2006 – 2007 ஆம் ஆண்டுகளிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் (PIOs) மற்றும் இந்தியாவில் வதியாத இந்தியர்கள் (NRIs),  இந்திய பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்களில் பட்டப்படிப்பினை மேற்கொள்ள நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.

தொழில்சார்ந்த மற்றும் தொழில்முறைசாராத (மருத்துவம்/துணைமருத்துவம் தவிர்ந்த) சகல துறைகளையும் உள்ளடக்கியதாக இந்த திட்டம் அமைந்துள்ளது.

புதுமுக (முதலாம் வருடம்) மாணவர்கள் மாத்திரமே இதற்காக விண்ணப்பிக்க முடியும். அத்துடன் இந்த புலமைப்பரிசில் தொடர்பான விரிவான தகவல்களை http://www.spdcindia.gov.in  என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளமுடியும்.

இலங்கையிலுள்ள தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகள் 2023 டிசம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையத்தளம் ஊடாக நேரடியாக விண்ணப்பிக்குமாறு கோரப்படுகின்றீர்கள்.