அரசாங்கம் மக்களை முடக்கும் சட்டங்களை உருவாக்க முயற்சி

88 0

மக்களாணை இல்லாத அரசு மக்களை முடக்கும் வகையிலான சட்டங்களை உருவாக்க முயற்சி செய்கின்றது என பாராமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, போராட்டங்கள் ஊடாக  அந்த முயற்சிகளை முறியடிப்போம் என்றும்  எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வேண்டாம் வாயை மூடும் சட்டங்கள் என்ற மக்கள் கருத்தரங்கு திங்கட்கிழமை (6) இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.