எரிவாயு விலை குறித்து லாப் நிறுவனத்தின் அறிவிப்பு !

143 0

இம்முறை லாப் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்கவில்லையென அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டியிருந்தாலும் இம்மாதத்தில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என லாப் நிறுவனத்தின் நிறைவேற்று குழு அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போதைய விலையின் அடிப்படையிலேயே சமையல் எரிவாயுவை விற்பனை செய்ய லாப்  நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில், முன்பிருந்த விலையிலேயே லாப் சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், 12.5 கிலோ லாப் சமையல் எரிவாயு சிலிண்டரை ரூ.3,985க்கும், 5 கிலோ எரிவாயு சிலிண்டரை ரூ.1,595க்கும் கொள்வனவு செய்ய முடியும்.

இதேவேளை, லிட்ரோ நிறுவனம் அண்மையில் சமையில் எரிவாயு விலையில் திருத்தங்களை மேற்கொண்டு அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.