14 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாண கடற்பரப்பில் கைது!

203 0

இலங்கை – யாழ்ப்பாண கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 14 இந்திய மீனவர்களே இவ்வாறு யாழ்ப்பாண கடல் எல்லைக்குள் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர், கைதான அனைவரும் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் நீரியல்வள திணைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.